Monday, 25 March 2013

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை

இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை ஒரு நயா பைசாகூட வாங்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் மாடுகளை இலவசமாகத் தருகிறது. தமிழ்நாடு முழுக்க பல ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

``அட, ஆச்சரியமா இருக்கே!'' என்று கோவர்தன் அறக்கட்டளையின் தலைவர் நடேசனை சந்திக்கச் சென்றோம். மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் நடேசன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். இத்தனை காலம் இவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததன் விளைவு, தமிழகம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகளை) அமைக்கப்பட்டு அங்கே மாடுகள் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசுக்களைப் பாதுகாக்க கோவர்தன் அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நடேசன்.

``பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை' என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?' என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்றைக்கு நாம் விவசாயத்தில் பின்தங்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், மாடுகளை நாம் காக்க மறந்ததுதான். மாடு என்கிற மிகப் பெரிய செல்வம் நம்மிடமிருந்து பறி போனதால், பைசா காசு செலவில்லாமல் நமக்குக் கிடைத்த எரு உரம் நமக்குக் கிடைக்காமலே போனது. வயல்களில் எரு உரங்களைப் போடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செயற்கையான உரங்களை வாங்கி வயலில் போட்டோம். முதலில் அதிக விளைச்சலைக் கொடுத்த அந்த உரங்கள் இப்போது விளைச்சலின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனி விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்றால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால், நிலத்துக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் ஒரே தீர்வு.
`இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாடுகள் வேண்டும். எங்களிடம் மாடு இல்லை. அதனால்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை' என்று வருத்தப்படுகிற விவசாயிகள் பலர். அப்படிப்பட்ட விவசாயிகளில் நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மாடுகளைத் தந்து வருகிறோம்'' என்கிறார் நடேசன்.

மாட்டுக் கொட்டிலில் மா என்று மாடுகள் கத்த, ``கொஞ்சம் இருங்க! எங்க குழந்தைகளுக்கு இது டீ டைம். நீங்க காப்பி சாப்பிடுங்க. குழந்தைங்களுக்கு தண்ணி காட்டியிட்டு வந்துர்றேன்'' என்று ஓடினார். சில நிமிடங்களுக்குக் பிறகு வந்தவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.

``ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாயாவது செலவாகும் என்கிறார்கள். உங்களால் மட்டும் மாடுகளை எப்படி இலவசமாகத் தர முடிகிறது?'' - நடேசனிடம் கேட்டோம்.

``கறவை நின்று போன மாடுகள், வயதான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகளால் பயன் இல்லை என்று நினைத்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட மாடுகளை கிடைத்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் செல்கிறது. அங்கு அந்த மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகிறது. அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இப்படிக் கடத்திச் செல்லப்படும் மாடுகளை பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் உதவியுடன் பிடித்து, அந்த மாடுகளை மீட்டு வருகிறோம். அந்த மாடுகளை எங்கள் பசு பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கிறோம்.

பயனற்ற மாடுகளை விற்று, அறுப்புக்கு அனுப்பத் தயாரில்லாத கருணையுள்ளம் கொண்ட சிலர், அந்த மாடுகளைக் கோயில்களுக்குத் தானமாக கொடுத்து விடுகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகளை ஒரு சில ஆண்டுகள வரை வைத்துப் பராமரிக்கிறது கோயில் நிர்வாகம். பின்பு, ஏலமுறையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுகிறது. இந்த மாடுகளை வெட்டி கறியாக்கி கேரளாவில் விற்க நினைக்கும் சிலர்தான் மீண்டும் மீண்டும் வேறுவேறு ரூபகங்களில் வந்து இந்த மாடுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இதனை எதிர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு போட்டோ ம். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் ஏலம் மூலமாக யாருக்கும் விற்கக்கூடாது. அதற்கு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவே, கோயில்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இவைகளைத்தான் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருகிறோம். நாங்கள் தரும் மாடுகள் பால் கொடுக்காது. குட்டி போடாது. வண்டி இழுக்காது. ஆனால் விலை மதிப்பற்ற சாணத்தையும், கோமியத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்!'' - கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் நடேசன்.

`யார் கேட்டாலும் மாடுகளைக் கொடுப்பீர்களா?' - இது நம்முடைய அடுத்த கேள்வி.

``நிச்சயமாகக் கொடுப்போம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். மாடு வேண்டும் என்று எங்களிடம் கேட்டு வருகிறவர்கள் ஒரு ஏக்கரோ அல்லது இரண்டு ஏக்கரோ நிலம் வைத்திருக்க வேண்டும். மாடுகள் கொடுக்கும் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு நாங்கள் மாடுகளைக் கொடுப்பதில்லை.

இந்த கண்டிஷன்கள் அடிப்படையானவை. இதை விட முக்கியமான இன்னொரு கண்டிஷன் இருக்கிறது. மாடு வேண்டும் என்று கேட்டு வந்தவுடன் யாருக்கு வேண்டுமானாலும் மாடுகளைக் கொடுத்துவிட மாட்டோம். மாடு வேண்டும் என்று கேட்கிறவர் யார், எப்படிப்பட்டவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை அவருக்கு இருக்கிறதா அல்லது மாடுகளை இலவசமாக வாங்கி, கிடைத்த விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்கிற மாதிரி பல கோணங்களில் அவர் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரிப்போம். தீர விசாரித்த பிறகு அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் மாடுகளைக் கொடுப்போம். மாடுகளை நிச்சயம் பாதுகாப்பார் என்கிற நம்பிக்கை அவர் மீது எங்களுக்கு வந்துவிட்டால் ஒரு மாடு அல்ல, இரண்டு மாடு அல்ல, நூறு மாடுகளைக்கூட கொடுப்போம்.

மாடுகளைக் கொடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருவோம். நாங்கள் கொடுத்த மாட்டை நீங்கள் நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்கிற திருப்தி எங்களுக்கு ஏற்பட்டால்தான் மாடு உங்களிடம் தொடர்ந்து இருக்கும். மாட்டுக்கு சரியான தினி கொடுக்காமல் காயப் போட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நபர் வந்து எங்களிடம் மாடு கேட்பதைவிட, மூன்று, நான்கு பேர் சேர்ந்து, கூட்டாக வந்து மாடுகளைக் கேட்டால், அவர்களுக்கு மாடு வழங்க முன்னுரிமை அளிப்போம். இப்படி மாடுகளைக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி வந்து மாடுகளைக் கண்காணிக்கவும் எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்கிறார் நடேசன். கோவர்தன் அறக்கட்டளையிலிருந்து மாடுகளைப் பெற்றதன் மூலம் பலருடைய வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உதாரணம், கூத்தம்பாக்கத்தில் உள்ள அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கொரு மாட்டை கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு. அந்த மாடுகளை வைத்துக் கொண்டு அவர்கள் காய்கறி வளர்த்தார்கள். முன்பு வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே செய்து வந்த அந்தப் பெண்கள் இன்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார் நடேசன்.

கோவர்தன் அறக்கட்டளையைப் பொருத்த வரை முக்கியமான இன்னொரு விஷயம், இந்த அமைப்பு கொடுத்த மாடுகளை வைத்துக் கொண்டு, இயற்கையான முறையில் பயிர்களை விளைவித்தால் அதை விற்றுத் தரவும் உதவி செய்கிறது. ``தாம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தினமும் இயற்கையாக விளையும் அரிசி ஒரு மூட்டை வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. நூறு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. சப்ளைதான் இல்லை'' என்கிறார் நடேசன்.

நடேசனின் முகவரியும் தொலைபேசி எண்ணும்:

கோவர்த்தன் அறக்கட்டளை,
6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073.

044-22272618.

Sunday, 24 March 2013

பில் கேட்ஸுக்கு ஓர் கடிதம்

பில் கேட்ஸுக்கு ஓர் கடிதம்

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் “Start” என்னும் பட்டன் உள்ளது. ஆனால் “Stop” பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. “Run” மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் வீட்டைவிட்டே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை “sit” என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. “Recycle Bin” என்பதை “Rescooter Bin” என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. “Find” பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் “Find” மெனுவிற்குச் சென்று தேடினேன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது.. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் “Hearts” விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8. 8.என்னுடைய குழந்தை “Microsoft word” கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது “Microsoft sentence” ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் “My Computer” ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் “My pictures” என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. “Microsoft Office” இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி “Microsoft Home” கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

நன்றி முக நுல்
‘மிச்செல் ஹெட்ஜஸ்’ (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges). 1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் மேலே படத்தில் நாவே இருப்பது ……!

அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000 வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு.

இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த ‘ஹூவ்லெட் பக்கார்ட்’ (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல் இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது. இந்த கிறிஸ்டல் மண்டையோடும் தலை பெருத்ததாக இருக்கிறது.

படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும்,மாயன் இனத்தவரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

மேலே தலை கவசத்துடன் இருக்கும் படம் எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவிதான் மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அதுதான் மற்றைய தலை பெருத்த சிலை.

இந்த தொழில்நுட்பம் , வித்தியாசமான உருவம் மாயன், எகிப்திய அதிசய, மர்ம பல துறை வளர்ச்சி என்பவற்றை எல்லாம் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகள் தொடர்பு இருந்ததாக தெரிகிறது அவர்கள் இங்கு வாழ்ந்ததாகவும் சில அதாரங்கள்....

நம்பவும் முடியவில்லை ..........
நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ....

வரும் ஆனா வராது .....

ராஜ் சிவா என்பவரின் கட்டுரையில் இருந்து தொகுத்தது.

Saturday, 23 March 2013

கனவுகளும் அதன் பலன்களும்

கனவுகளும் அதன் பலன்களும்  

      நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
      அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
      இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

  • v  ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
  • v  வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • v  கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • v  விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
  • v  திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
  • v  ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • v  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
  • v  சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • v  நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • v  தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • v  இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
  • v  திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • v  தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • v  உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • v  கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
  • v  ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
  • v  மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • v  கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  • v  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • v  வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.
  • v  மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

  • v  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
  • v  தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
  • v  எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
  • v  எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
  • v  இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
  • v  பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
  • v  புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
  • v  குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
  • v  நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
  • v  ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
  • v  நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
  • v  முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
  • v  முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
  • v  சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
  • v  பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
  • v  காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

Read more at http://tk.makkalsanthai.com/2013/02/blog-post_8266.html#VBSgy4FtKhCeAI2q.99 

Friday, 22 March 2013

நவ சக்திகள்



எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதா கச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது . எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள்யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளிமற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள ்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரதகண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில்நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள்

1வாமை, 2ஜேஷ்டை, 3ரவுத்ரி, 4காளி, 5கலவிகரணி, 6பலவிகரணி, 7பலப்பிரமதனி, 8சர்வபூததமனி, 9மனோன்மணி

நவ தீர்த்தங்கள்

1கங்கை, 2யமுனை, 3சரஸ்வதி, 4கோதாவரி, 5சரயு, 6நர்மதை, 7காவிரி, 8பாலாறு, 9குமரி

நவ வீரர்கள்

1வீரவாகுதேவர்,
2வீரகேசரி, 3வீரமகேந்திரன், 4வீரமகேசன், 5வீரபுரந்திரன், 6வீரராக்ஷசன், 7வீரமார்த்தாண்டன ், 8வீரராந்தகன், 9வீரதீரன்

நவ அபிஷேகங்கள்

1மஞ்சள், 2பஞ்சாமிர்தம், 3பால்,
4நெய்,
5தேன்,
6தயிர், 7சர்க்கரை, 8சந்தனம், 9விபூதி.

நவ ரசம்

1இன்பம், 2நகை, 3கருணை, 4கோபம், 5வீரம்,
6பயம், 7அருவருப்பு, 8அற்புதம், 9சாந்தம் ஆகியன

நவக்கிரகங்கள்
1சூரியன், 2சந்திரன், 3செவ்வாய், 4புதன்,
5குரு, 6சுக்கிரன், 7சனி,
8ராகு,
9கேது

நவமணிகள்

1கோமேதகம், 2நீலம், 3வைரம், 4பவளம், 5புட்பராகம், 6மரகதம், 7மாணிக்கம், 8முத்து, 9வைடூரியம்

நவ திரவியங்கள்

1பிருதிவி, 2அப்பு,
3தேயு,
4வாயு, 5ஆகாயம், 6காலம்,
7திக்கு, 8ஆன்மா, 9மனம்

நவலோகம் (தாது)

1பொன், 2வெள்ளி, 3செம்பு, 4பித்தளை, 5ஈயம், 6வெண்கலம், 7இரும்பு,
8தரா, 9துத்தநாகம்

நவ தானியங்கள்

1நெல், 2கோதுமை, 3பாசிப்பயறு, 4துவரை, 5மொச்சை, 6எள், 7கொள்ளு, 8உளுந்து, 9வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது

1சோமவார விரதம், 2திருவாதிரை விரதம், 3உமாகேச்வர விரதம், 4சிவராத்ரி விரதம், 5பிரதோஷ விரதம், 6கேதார விரதம்,
7ரிஷப விரதம், 8கல்யாணசுந்தர விரதம்,
9சூல விரதம்

நவசந்தி தாளங்கள்

1அரிதாளம், 2அருமதாளம், 3சமதாளம், 4சயதாளம், 5சித்திரதாளம், 6துருவதாளம், 7நிவர்த்திதாளம், 8படிமதாளம், 9விடதாளம்

அடியார்களின் பண்புகள்

1எதிர்கொள்ளல்,
2பணிதல், 3ஆசனம் (இருக்கை) தருதல்,
4கால் கழுவுதல்,5அருச்சித்தல், 6தூபம் இடல், 7தீபம் சாட்டல், 8புகழ்தல், 9அமுது அளித்தல்

நவரத்னங்கள்

1தன்வந்த்ரி, 2க்ஷணபகர், 3அமரஸிம்ஹர், 4சங்கு, 5வேதாலபட்டர்,
6கடகர்ப்பரர், 7காளிதாசர், 8வராகமிஹிரர், 9வரருசி (விக்ரமார்க்கனி ன் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படு வர்)

அடியார்களின் நவகுணங்கள்

1அன்பு, 2இனிமை, 3உண்மை, 4நன்மை, 5மென்மை, 6சிந்தனை, 7காலம்,
8சபை, 9மவுனம்.

நவ நிதிகள்

1சங்கம், 2பதுமம், 3மகாபதுமம், 4மகரம், 5கச்சபம், 6முகுந்தம், 7குந்தம்,
8நீலம்,
9வரம்

நவ குண்டங்கள்
(யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பதுவகையிலான யாக குண்ட அமைப்புக்கள்)

1சதுரம், 2யோனி, 3அர்த்த 4சந்திரன், 5திரிகோணம், 6விருத்தம் (வட்டம்), 7அறுகோணம், 8பத்மம், 9எண்கோணம், (பிரதான விருத்தம்.)

நவவித பக்தி

1சிரவணம், 2கீர்த்தனம், 3ஸ்மரணம், 4பாத சேவனம், 5அர்ச்சனம்,6வந்தனம், 7தாஸ்யம், 8சக்கியம், 9ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள்

1குமார பிரம்மன், 2அர்க்க பிரம்மன்,
3வீர பிரம்மன், 4பால பிரம்மன், 5சுவர்க்க பிரம்மன், 6கருட பிரம்மன், 7விஸ்வ பிரம்மன், 8பத்ம பிரம்மன், 9தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள்

1சூரியனார் கோயிவில், 2திங்களூர், 3வைத்தீஸ்வரன் கோவில், 4திருவெண்காடு,
5ஆலங்குடி, 6கஞ்சனூர், 7திருநள்ளாறு, 8திருநாகேஸ்வரம், 9கீழ்ப்பெரும்பள் ளம்

நவபாஷாணம்

1வீரம்,
2பூரம்,
3ரசம், 4ஜாதிலிங்கம், 5கண்டகம், 6கவுரி பாஷாணம், 7வெள்ளைபாஷாணம், 8ம்ருதர்சிங், 9சிலாஷத்

நவதுர்க்கா

1ஸித்திதத்ரி, 2கஷ்முந்தா, 3பிரம்மாச்சாரினி , 4ஷைலபுத்ரி, 5மகா கவுரி, 6சந்திரகாந்தா, 7ஸ்கந்தமாதா, 8மகிஷாசுரமர்த்தி னி, 9காளராத்ரி

நவ சக்கரங்கள்
1த்ரைலோக்ய மோகன சக்கரம், 2சர்வசாபுரக சக்கரம்,
3சர்வ சம்மோகனசக்கரம்,
4சர்வ சவுபாக்ய சக்கரம், 5சர்வார்த்த சாதக சக்கரம், 6சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், 9சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள்

1ஆதிநாதர், 2உதய நாதர், 3சத்ய நாதர், 4சந்தோஷ நாதர், 5ஆச்சாள் அசாம்பயநாதர்,
6கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7சித்த சொவ்றங்கி நாதர், 8மச்சேந்திர நாதர்,
9குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள்

¤இரண்டு கண்கள்,

¤இரண்டு காதுகள்,

¤இரண்டு மூக்குத் துவாரங்கள்,

¤ஒரு வாய்,

¤இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள்

1தோல், 2ரத்தம், 3மாமிசம், 4மேதஸ், 5எலும்பு, 6மஜ்ஜை, 7சுக்கிலம், 8தேஜஸ், 9ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர ். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக் குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும்,நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Wednesday, 20 March 2013

Anaivarukkum Nanmai Sei:

Anaivarukkum Nanmai Sei:

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!! அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

சுயம்பு சித்தன்:



 
    
சுயம்பு சித்தன்: பாடல் ௨ உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே இது மிக அருமையான பாடல். பலவிதத்திலும் அர்த்தம் கொள்ளக்கூடியது. முதலில் கடைசி இரண்டு வரிகளின் அர்த்தம் பார்ப்போம். (மேலே சொன்னவாறெல்லாம் இருக்கும்) தேவர்களின் தலைவனே நீ எனக்கு புறப்பற்று எல்லாம் அறுந்து, அகப்பற்றும், நான் எனும் அகங்காரமும் இழந்து நலம்பெற வழிசொல். இப்போது முதல் இரண்டு வரிகளின் எனக்கு புரிந்த மூன்று அர்த்தங்களைப் பார்ப்போம். ௧. பெருமகிழ்ச்சியுடன் துன்பமற்று யோகநிலையில் இனிமையாக பேசி விளையாடுபவன் நீ தானே உல்லாச - பெருமகிழ்ச்சியுடன் இருப்பது நிராகுல - துன்பமற்று இருப்பது யோக - யோகநிலையில் இருப்பது இத - இதமாக இருப்பது (வித - பல விதமாக இருப்பது) சல்லாப - காதல் பேசுதல் (இனிமையாக பேசுதல்) விநோதன் - விளையாடுபவன் ௨. உல்லாச, நிராகுல, யோக என பலவிதங்களில் சல்லாப விநோதனாக (இனிமையாக பேசி விளையாடுபவனாக) இருப்பவன் நீ தானே. அதாவது உல்லாச சல்லாப விநோதனாகநிராகுல சல்லாப விநோதனாக, யோக சல்லாப விநோதனாக என பலவிதமாக இருப்பவன் நீ தானே. ௩. என்னுடலில் உள்ள ஆறு ஆதாரங்களாக இருப்பவன் நீ தானே. இந்த ஆறு வார்த்தைகளும் ஆறுபடை வீடுகளையும், நம்முடலில் இருக்கு ஆறு ஆதாரங்களை குறிப்பிடுகின்றன உல்லாச - என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது; திருப்பரங்குன்றம்; மூலாதாரம் . நிராகுல - துன்பமற்று ஞானமயமாக இருப்பது; திருச்செந்தூர்; சுவாதிஷ்டானம். யோக - யோகநிலையாகிய இன்பத்தைத் தருவது; திருஆவினன்குடி; மணிபூரகம். இத - இதமாக இருப்பது; சுவாமிமலை; அநாகதம். சல்லாபம் - குன்றுதோறாடல்; விசுத்தி. விநோதம் - வியப்பு, மகிழ்ச்சி; பழமுதிர்சோலை; ஆக்ஞை.

Friday, 8 March 2013

இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்


* * * * * * * * * * * * * * * * * * * * *
"இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே"
-திருநீற்றுப்பதிகம்-

இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே

புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை..!

புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை..!

ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன. பெரும் பொருளை அதற்காக அள்ளி இறைக்கின்றன. இராணுவம் பொருளாதாரம் விஞ்ஞானம் போன்ற அனைத்திலும் உலக அரசுகள் ஒன்றையொன்று வேவு பார்த்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. புலனாய்வுத் துறையின் தகவல்களை வைத்துத் தமது வெளியுறவுக் கொள்கைகளை செப்பனிட்டுக் கொள்கின்றன.

இத்தகைய புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே இன்றைக்கும் எதுவித மாற்றமின்றி உலகத்தால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன சொன்னவரைத் தெரியாமல்!

அரசாங்கம் ஒன்றுக்கு உலகத்தைப் பார்க்கும் கண்ணாக இருப்பது உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் கூற்றை மெய்ப்பிப்பது போல அண்மையில் தன்னால் தேடப்பட்ட ஒருவரை பாகிஸ்தானில் உளவுத் துறை என்ற கண்ணாலே பார்த்து நடவடிக்கை எடுத்தது அமெரிக்கா.

எல்லோருக்கும் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!.

புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவர்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள்.

"வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று."

இனி உளவு வேலைக்கு மதத் தலைவர்கள் போன்ற கோலம் தான் மிகவும் பொருத்தமானது என்பது வள்ளுவர் முடிபு. அவர்களால் தான் கடினமான இடங்களில் கூட இலகுவாக புக முடியும். இன்றைய உலகில் பல அரசுகளுக்கு மதபீடங்களும் மத குருக்களும் தான் உளவாளிகளாக இருக்கின்றமை வள்ளுவரின் அரசியல் தெளிவிற்கு சிறந்த சான்றாகும்.

"துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்வு இலது ஒற்று."

உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர்.

அது மட்டுமல்ல தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர்.

ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாது. அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர்.

ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது.

"ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்."

அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை ஆள்க என்றார் அவர்.

உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர்.

"சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை"

புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! எத்தனையோ அரசியல் சித்தாந்தங்களைப் படித்த நாம் வள்ளுவரின் ஒற்றாடலைப் படித்திருந்தால் பெருமளவு துன்பங்களைத் தவிர்த்திருக்கக் கூடும். என்ன செய்வது?

உயிரின் தாகம் நிற்கட்டுமே உங்கள் செந்நீரால்

உயிரின் தாகம் நிற்கட்டுமே 
உங்கள் செந்நீரால் 
ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும் என்றால் உங்கள் ஒரு சொட்டு இரத்தம்
ஒரு குடும்பத்தையே காக்கும் !

உங்கள் இரத்தத்தால்
ஒரு சிரம் காக்காப்பட்டாலும்
ஆயிரம் கரங்கள் சேர்ந்து
உன் சிரத்தை காக்கும்...!

எமனின் பாசக் கயிற்றை
குருதியால் அறுக்கலாம் ...!
உங்கள் குருதியால் உலகையே காக்கலாம்
மனதில் உறுதியோடு இருங்கள் !

மனிதனை தின்னும்
மண்ணுக்கு இரத்தத்தை அர்பணிக்கும் மனிதனே !
ஒரு உயிரைக் காக்க அறப்பணி செய்யுங்கள்...

வசீகரமான வளையல் பாட்டி


வசீகரமான வளையல் பாட்டி

‘நான் சீதாப்பாட்டி வந்திருக்கேன்... வளையல் போடுறீயளா புள்ளையளா...’’ - இந்தக் குரலுக்கு தஞ்சாவூரை ஒட்டியுள்ள பள்ளி அக்ரஹாரம், திருவையாறு, அரசூர் வட்டாரங்களில் உள்ள எல்லா வீடுகளின் கதவுகளும் திறக்கின்றன. ஒரு கையில் வாளி, இன்னொரு கையில் பை, இடுப்பில் அட்டைப்பெட்டி... இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வீட்டுக்கு வீடு நின்று குரல் கொடுத்து நகர்கிற சீதாப்பாட்டிக்கு வயது 103 என்றால் நம்பமுடியாது. வார்த்தையில் மட்டுமின்றி பார்வை, நடை அத்தனையிலும் அப்படியொரு தெளிவு!

சீதாப்பாட்டிக்கு சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள மானம்புச்சாவடி. கணவர் ராமசாமி 40 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மகன்கள். 1 மகள். 25க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள். அவர்களில் சிலருக்கு திருமணமாகி பேரன், பேத்தி பார்த்து விட்டார்கள். அவர்கள் யாரையும் அண்டியிருக்கவில்லை சீதாப்பாட்டி. எந்த வீட்டுக்குச் சென்றாலும் அவரிடம் வளையல் வாங்குகிறார்களோ இல்லையோ, தங்கள் வீட்டுப் பெரிய மனுஷியாகப் பாவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடோ, டீயோ கொடுக்கிறார்கள். அடுத்த நொடியில் அந்த வீட்டில் கலந்து, உறவாடத் தொடங்கி விடுகிறார் சீதாப்பாட்டி.

‘‘வீட்டுக்காரருக்கு நெசவுத்தொழில். வீட்டிலேயே தறிபோட்டு நெய்வோம். பட்டு நெசவுதான். அந்தக் காலத்துல அவர் நெஞ்சு தர்ற சேலைகளை எடுத்துக்கிட்டு வல்லம், ராஜகிரி, பாபநாசம், கோவிந்தகுடி, திருவையாறுன்னு சுத்தி விப்பேன். அப்போத்தொட்டு இந்த ஜனங்கள்லாம் எனக்கு உறவு. போகப்போக நெசவுத்தொழில் சரியாயில்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாமப் போச்சு. சிண்டு, சிறுசுகளை வச்சுக்கிட்டு சிரமமாப் போச்சு.
இந்த வளையல் பெட்டியையும், ரப்பர் சாமான்களையும் கையில எடுத்தப்போ எனக்கு 22 வயசு. மொத்தக்கடைல சரக்கை எடுத்துக்கிட்டு வந்து ஊரு ஊராப் போயி விப்பேன்.

ஏற்கனவே தெரிஞ்சவங்ககிறதால எல்லாரும் எங்கிட்ட விரும்பி வளையல் போட்டுக்குவாங்க. இங்கே இளைஞ்சு திரியிற குமரிக எல்லாம் ஆத்தா வயித்துல இருக்கிறப்போ வளைகாப்பு போட்டுவிட்டவ நான்தான்!’’ - பற்கள் சிதைந்த இடைவெளி தெரிய பலமாகச் சிரிக்கிறார் சீதாப்பாட்டி.

திருவையாறு சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் வளைக்காப்பு நடந்தாலும் தேடிப் பிடித்து சீதாப்பாட்டியை அழைத்து வந்து விடுகிறார்கள். அவர் வந்து முதலில் வளையல் போட்டவுடன்தான் மற்ற உறவுக்காரர்கள் வளையல் மாட்டி விடுவார்களாம். அந்த அளவுக்கு ராசி கை அவருடையது.

‘‘சீதாப்பாட்டி வந்துட்டா தெருவே கொண்டாட்டமாயிடும்.

எல்லாப் பெண்களும் கூடிருவாங்க. வளையல் போட்டுக்கிறதை விட அது பேசுற கிண்டலைக் கேக்குறதுக்குன்னே வருவாங்க. வளையல் மட்டுமில்லாம, சின்னச்சின்ன பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துக்கிட்டு வரும். சாப்பாடு கொடுத்தா வாங்கிச் சாப்பிடும். ஆனா, பணம் கொடுத்தா வாங்காது. வளையலுக்கு எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்தை அப்படியே திருப்பிக் கொடுத்திடும். ‘வச்சுக்க பாட்டி’ன்னு சொன்னா, உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுடின்னு உபகதை பேசும். கல்யாணம் தள்ளிப்போற பெண்களுக்கு பாட்டி கையால வளையல் போட்டா உடனே கல்யாணம் கூடிவரும்னு எல்லாரும் நம்புறாங்க.

அதேமாதிரி வளைகாப்பு வைபவத்துல பாட்டி வளையல் போட்டா சுகப்பிரசவம் ஆகும்...’’ என்கிறார் திருவையாறு ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த புஷ்பராணி.

‘‘மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் தனியாக சிரமப்படுகிறீர்கள்?’’- பாட்டியிடம் கேட்டால் இறுக்கமாகப் பேசுகிறார். ‘‘அதது புள்ளை குட்டின்னு ஆயிருச்சு. அவங்கவங்க உழைப்பு, அவங்கவங்க குடும்பத்தைப் பாக்கத்தான் சரியா இருக்கு. பாவம்... இந்த வயசுல அதுகளுக்குச் சுமையா ஏன் நான் போய் உக்காரணும்? அவங்களுக்கு உதவி செய்ய முடியாட்டியும் உபத்திரவம் செய்யாம இருக்கணும். இனிமே எனக்கென்ன இருக்கு? எந்த வீட்டுக்குப் போனாலும், ‘வா பாட்டி’ன்னு உரிமையாக் கூப்பிட்டு, நாலு சோறு போட்டு, தண்ணி கொடுக்க இந்த ஜனங்கள்லாம் இருக்காங்க. 



புள்ளைகளை பாக்கணும்னு ஆசை வந்தா, புள்ளைகளுக்கு ஏதாவது தீனி வாங்கிட்டு நேரா கிளம்பிப் போயிருவேன். காலையில போனா ராத்திரிக்கு கிளம்பிருவேன்...’’ என்கிறார் சீதாப்பாட்டி. தஞ்சாவூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார் சீதாப்பாட்டி. அதிகப்பட்சம் 200 ரூபாய். அதை விற்றால் ஐம்பதோ, நூறோ கிடைக்கும். யாரிடமும் கணக்குப் போட்டு கறாராகப் பேச மாட்டார். கொடுப்பதை வாங்கிக்கொள்வார்.

‘‘பாட்டி போற வழியில மனம் பிறழ்ந்தவங்க, முடியாதவங்க நின்னா இருக்கறதை குடுத்துட்டுப் போயிரும். சின்னப்புள்ளைகளுக்கு வளையல் போட்டா காசு வாங்காது. கொடுத்தாலும், ‘புள்ளைகளுக்கு பிஸ்கட்டு வாங்கிக் குடு ஆத்தா’ன்னு சொல்லிடும்...’’ என்று பாட்டி புராணம் பாடுகிறார் ரம்யா.

திருவையாறு பகுதியில் வசிக்கும் ரஹீமா பீவியின் மகள்களுக்கு பாட்டி வளையல் போட்ட பிறகுதான் திருமணம் கூடி வந்ததாம். அதற்குப் பிரதிபலனாக தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் பாட்டியை தங்கிக்கொள்ள சொல்லிவிட்டார். தனிக்காட்டு ராணியாக சுதந்திரமாக வாழ்கிறார் சீதாப்பாட்டி. ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது.

‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே... வேணாம் தம்பி...’’ என்கிறார் சீதாப்பாட்டி.

சவுக்கால் அடித்தது போல் இருக்கிறது சீதாப்பாட்டியின் வார்த்தைகள். இன்னும் பல ஆண்டுகள் அவர் பாடமாக வாழ வேண்டும்!

Thursday, 7 March 2013

Indian Magical Medicinal Herbs


Indian Magical Medicinal Herbs

INDIA IS LOADED WITH MAGICAL MEDICINAL HERBS.

COLDS

[image: Indian Magical Medicinal Herbs]

Mix a gram of dalchini/cinnamon powder with a teaspoon of honey to cure
cold. Prepare a cup of tea to which you should add ginger, clove, bay leaf
and black pepper.. This should be consumed twice a day. Reduce the intake as
the cold disappears.

GINGER FOR COLDS.

[image: Indian Magical Medicinal Herbs]

Ginger tea is very good to cure cold. Preparation of tea: cut ginger into
small pieces and boil it with water, boil it a few times and then add sugar
to sweeten and milk to taste, and drink it hot.

DRY COUGHS.

[image: Indian Magical Medicinal Herbs]

Add a gram of turmeric (haldi) powder to a teaspoon of honey for curing dry
cough. Also chew a cardamom for a long time.

BLOCKED NOSE.

[image: Indian Magical Medicinal Herbs]

For blocked nose or to relieve congestion, take a table spoon of crushed
carom seeds (ajwain) and tie it in a cloth and inhale it.

SORE THROAT.

[image: Indian Magical Medicinal Herbs]

Add a tea spoon of cumin seeds (jeera) and a few small pieces of dry ginger
to a glass of boiling water. Simmer it for a few minutes, and then let it
cool. Drink it twice daily. This will cure cold as well as sore throat.

AJWAIN/AJMO FOR ASTHMA.

[image: Indian Magical Medicinal Herbs]

Boil ajwain in water and inhale the steam.

CURE FOR BACKACHE..

[image: Indian Magical Medicinal Herbs]

Rub ginger paste on the backache to get relief.

GARLIC FOR HIGH BLOOD PRESSURE.

[image: Indian Magical Medicinal Herbs]

Have 1-2 pod garlic (lasan) first thing in the morning with water

HONEY AND GINGER FOR HIGH BLOOD PRESSURE.

[image: Indian Magical Medicinal Herbs]

Mix 1 table spoon and 1 table spoon ginger (adrak) juice, 1 table spoon of
crushed cumin seeds (jeera), and have it twice daily.

MIGRAINE. .

[image: Indian Magical Medicinal Herbs]

For the cure of migraine or acute cold in the head; boil a tablespoon of
pepper powder, and a pinch of turmeric in a cup of milk, and have it daily
for a few couple of days.

BITTER GOURD/KARELA IS GOOD..

[image: Indian Magical Medicinal Herbs]

A tablespoon of amla juice mixed with a cup of fresh bitter gourd (karela)
juice and taken daily for 2 months reduces blood sugar.

TURMERIC/ ARAD CURE FOR INJURIES

[image: Indian Magical Medicinal Herbs]

For any cut or wound, apply turmeric powder to the injured portion to stop
the bleeding. It also works as an antiseptic. You can tie a bandage after
applying haldi/turmeric.

CRAMPS

[image: Indian Magical Medicinal Herbs]

You must do a self-massage using mustard oil every morning. Just take a
little oil between your palms and rub it all over your body. Then take a
shower. This is especially beneficial during winter. You could also mix a
little mustard powder with water to make a paste and apply this on your
palms and soles of your feet.

HEADACHES.

[image: Indian Magical Medicinal Herbs]

If you have a regular migraine problem, include five almonds along with hot
milk in your daily diet. You could also have a gram of black pepper along
with honey or milk, twice or thrice a day. Make an almond paste by rubbing
wet almonds against a stone.This can be applied to forehead.

Eat an apple with a little salt on an empty stomach everyday and see its
wonderful effects. OR When headache is caused by cold winds, cinnamon works
best in curing headache. Make a paste of cinnamon by mixing in water and
apply it all over your forehead.

TURMERIC

[image: Indian Magical Medicinal Herbs]

FOR ARTHRITIS.

Turmeric can be used in treating arthritis due to its anti-inflammatory
property. Turmeric can be taken as a drink other than adding to dishes to
help prevent all problems. Use one teaspoon of turmeric powder per cup of
warm milk every day. It is also used as a paste for local action.

HICCUPS

[image: Indian Magical Medicinal Herbs]

Take a warm slice of lemon and sprinkle salt, sugar and black pepper on it..
The lemon should be eaten until the hiccups stop.
knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

இடைக்காட்டுச் சித்தர்


இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்!அவர், 'காணாமல் கோணாமற் கண்டு கொடு!ஆடுகாண் போகுது பார் போகுது பார்!என்று சொல்லி இருக்கிறார். 

"காணாமல்"என்றால் சூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது சூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம்கொடுக்க வேண்டும். "கோணாமல்"என்பதற்கு சூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது சூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு"என்பதற்கு சூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். 

இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம்.

Monday, 4 March 2013

இது போல எப்ப தமிழ் நாட்டுல நடக்கும். ********************* குடி குடியைக் கெடுக்கும்”

இது போல எப்ப தமிழ் நாட்டுல நடக்கும்.
*********************
குடி குடியைக் கெடுக்கும்” என்பது முதுமொழி. 

உடலுக்கு கேடு விளைவிக்கும் மது இன்றைய கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. புத்தாண்டு, பண்டிகை, திருவிழாக்கள் என்று மது விற்பனை களைகட்டுகிறது.

தமிழ் சமூகத்தில், தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. மதுக்கடைகள் மூலம் தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய்.

அரசுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. ஆனால் மது வியாபாரத்தால் சீரழிந்த குடும்பங்கள் பல கோடி. இதை நம்பி தான் அரசின் இலவச திட்டங்கள் செயல்படுகின்றன. ஒருபக்கம் மக்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலவசங்களை அள்ளி வீசுகிறது நமது மதிகெட்ட அரசுகள். மது அருந்துபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆகும் மருத்துவ செலவோ ரூ. 2 லட்சம் கோடி.



குடி குடியைக் கெடுக்கும்” என்பது முதுமொழி. குடிப்பதால் கல்லீரல் பாதிப்படைகிறது. உடல் மஞ்சள் ஆகுதல், பித்த நீர்க்குழாய் அடைப்பினால் வயிற்றுவலி, பசியின்மை உருவாகும். தோளிலும் காலிலும் தசை நார்கள் செயலிழக்கும். மூளை பாதிக்கப்பட்டு மறதி, சோர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதுடன் மனநோயும் ஏற்படும். மூளை, இதயம், நரம்பு, இனவிருத்தி உறுப்பு, இரைப்பை, கணையம் ஆகியவை நாளடைவில் பழுதடையும். வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.

இப்படி மனிதனுக்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பதே மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனின் வேண்டுகோள்.

BODY, SOUL AND SPIRIT OF A MAN

1. WHAT IS BODY, SOUL AND SPIRIT OF A MAN?

The Human Body which has been designed and made by God according to the Bible, is endowed with five physical senses
The Human body has the senses of touch, smell, hearing, sight and taste
The Body is perishable, mortal and is subject to pain, suffering and sickness
The Body is essential for existence on this planet, and it is endowed with a Soul and a Spirit.
The Soul consists of a Mind, an Emotion and a Will
Emotion is intricately intertwined with the Spirit, and both of them operate in and through the human body
Emotion includes happiness, sadness, worry, dullness, being moody, excitement etc.
Mind has the ability to think, rationalize, memorize, interpret, imagine, understand etc.
Mind has varying degrees of intelligence and capability to develop further
The human Will has the ability to decide and determine, whether to do or not to do
Will is closely related to ones Ego, Bias, Preconceptions, Determinations, Decisions, Values, Philosophy etc.
The Spirit and Soul cannot be separated even when a person dies, but they have their own identity and purpose
The Spirit is the Quality, attribute, characteristics, nature and ingredient of God, which has been imparted into human beings
Spiritual attributes of man include love, joy, peace, long suffering, gentleness, goodness, faith, meekness and temperance (these qualities are referred to as the Fruit of the Spirit in Galatians 5:22-23)
The other spiritual qualities are forgiveness, giving, creativity, wisdom, spiritual power, power to get wealth etc. 

Sunday, 3 March 2013

நீராட வேண்டிய தலங்கள்!:-

 நீராட வேண்டிய தலங்கள்!:-
பவானி.........

ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானியில் காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலத்தில் சங்கமேஸ்வரர் உள்ளார். இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுபவர்களை பாவம் தீண்டாது. மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.

மகாபலிபுரம்........ தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மகாபலிபுரம் கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார்.

அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் பக்தியை கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார்.

முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

திருவெண்காடு............. திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் மாசி வளர்பிறையில் இந்திர விழா நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்.

ராமநாதபுரம்......... ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்பவிழா நடக்கும். சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.

சென்னை........... சென்னையில் மயிலை கபாலீஸ்வரரும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரை சென்று தீர்த்தமாடித் திரும்புவார்கள்.

திருவேட்டகுடி........... ஒரு சமயம் பார்வதி மீனவப் பெண்ணாய் அவதரித்தாள். அவளைத் திருமணம் முடிக்க காலம் கனிந்தபோது ஈசன் கடற்கரைக்குச் சென்று ஒரு பெரிய ராட்சத மீனை உருவாக்கி மீனவர்களுக்குத் துன்பம் தரச் செய்து பின் அவரே மீனவனாக உருமாறி, அம்மீனை அடக்கி நற்பெயர் பெற்று மீனவப் பெண்ணான பார்வதியை மணந்து கொண்டு பின் சிவனாகக் காட்சி தந்தார்.

மீனவத் தலைவன் உங்களை நாங்கள் எப்போது மீண்டும் காண்பதுப எனக் கேட்க, மாசி மகத்தன்று நாங்கள் கடலாடவருவோம் அப்போது காணலாம் எனக் கூறிச் சென்றார். புராணப்படி இது நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி அன்று ஈசனும் ஈஸ்வரியும் கடற்கரைக்கு எழுந்தருள்வார்கள். அப்போது கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனை மாப்ளே, மாப்ளே என மகிழ்வுடன் கூவியழைத்து மகிழ்ந்து தரிசிப்பார்கள்.

திருவண்ணாமலை............. வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை ஆண்டபோது தனக்கு புத்திரபாக்யம் வேண்டும் என அண்ணாமலையாரை தினம் வழிபட்டு வந்தார். அவருக்கு உதவ எண்ணம் கொண்ட ஈசன், அம்மன்னனின் அரண்மனைக்கு குழந்தையாக வந்து தவழ்ந்தார்.

குழந்தையை மன்னன் கையில் எடுத்தவுடன் ஈசன் காட்சியளித்து பக்தனே கவலைப்படாதே நானே உனக்கு மகனாகப் பிறப்பேன். உன் இறுதிக் காலத்திற்குப் பின் மகன் செய்யும் ஈமச் சடங்குகளை உனக்கு நானே செய்வேன் என்றார். அப்படியே மன்னன் சித்தியடைந்த இடமான பள்ளி கொண்டாபட்டில் கவுதமி நதிக்கரைக்கு அண்ணாமலையார் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று எழுந்தருள்வது தவறாமல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி........... மாசிமகத்தன்று நூற்றுக்கணக்கான ஆலய சுவாமிகள் அலங்காரத்துடன் புதுவையில் வைத்திக் குப்பம் கடற்கரையில் அமைத்த பந்தலில் எழுந்தருளுவர். பின்னர் தீர்த்தவாரி விழா நடைபெறும். பக்தர்கள் வந்திருந்து அனைத்து சுவாமிகளையும் தரிசித்து புண்ணியம் பெறுவார்கள்.

திருக்காமீஸ்வரம், வரதராஜப் பெருமாளுடன் காரைக்கால் திருப்பட்டணத்தில் மாசிமக தீர்த்தவாரி விழாவில் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள், திருமருகல் வரதராஜப் பெருமாள், கோவில் பத்து கோதண்டபானி, நிரவி காளியம்மன், கரியமாணிக்கப் பெருமாள், காரை நித்யகல்யாணப் பெருமாள், கலந்து கொண்டு தீர்த்தவாரி காண்பது காணக்கிடைக்காத ஒன்று.

திருநல்லூர்......... குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்ப என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது.

அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.

திருகுறுக்கை........... மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக் குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது.

பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும். இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

இடுப்பு வலி நீங்க

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி.

இடுப்பு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு…

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும். கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உஉடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.




பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும். வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்

Saturday, 2 March 2013

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.