Tuesday, 23 April 2013
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்???!!!!
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்???!!!!
என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.
''பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Top-1 Engineering
ஒரு காலத்தில் அரசு வேலை எப்படி இளைய தலைமுறைஇன் கனவாக இருந்ததோ... இப்போது அதே போல சொல்லப்போனால் அதை விட ஸ்திரமான ஒரு நிலைஇல் இருகின்றன பொறியியல் படிப்புகள் காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் 'கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் 'மோஸ்ட் வான்ட்டட்' ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்
Materials Science and Engineering
பொறியியல் படை பிரிவுகளிலே இப்போது மிகவும் முக்கியமானது Materials Science and Engineering எல்லா பொருட்களின் மூலகூறுகளின் தன்மையை பற்றி படிப்பதே இதன் சிறப்பம்சம்
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
Atomic Energy
மும்பை பல்கலைகழகம் மற்றும் புவனேஸ்வரில் உள்ள NISER (National Institute of Science and Research) Bilology , Chemistry, Maths and Physics அடங்கிய ஐந்து வருடகளுக்கான இந்த Interagate M.Sc Course அளிக்கின்றன
என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான 'நெஸ்ட்', 'ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்'-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் 'அப்ஜக்டிவ்' முறையில் அமைந்திருக்கும்.
Aerospace Engineering
செயற்கைகோள்கள் , ராக்கெட்கள் , ஏவுகணைகள் பற்றிய படிப்பை வழங்கி வந்த துறை இப்பொழுது இன்னும் பல புதிய பாடகூறுகளை தனக்குள் இணைத்துக்கொண்டு Aerospace Engineering கல்வியாக மாறிஉள்ளது
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
Electrochemical Engineering
வேதி பொருட்கள் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுவது, இவற்றில் உள்ள அறிவியல் கூறுகள், வடிவமைப்பு, குணாதிசியங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி படிக்கும் படிப்புதான் Electrochemical Engineering
பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள 'சிக்ரி' (சி.இ.சி.ஆர்.ஐ - சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்
Pharmaceutical Engineering
இதுவரை Chemical Engineering er பணியமர்த்திய Pharmaceutical தொழில்துறை, இப்பொழுது அந்த பணிஇடகளுக்கு அதில் இன்னும் ஆழமாக படிக்க முடிகிற இந்த Pharmaceutical Engineering பயன்படுத்துகிறது
மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.
புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
Petroleum Refining technology
Petroleum பிரித்து எடுப்பது , அதை பராமரிப்பது, சுத்திகரிப்பது என இந்த Petroleum துறைஇல் உள்ள தொழில் நுட்பகளை படிக்கும் துறை
வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.
Bio Medical Engineering
பொறியால் தொழில் நுட்பத்தை மருத்துவ துறைஇல் புகுத்தும் இந்த Bio Informatics, Physiological signal processing , Medical Imaging , 3D Modeling போன்ற பாட பிரிவுகள் அடங்கும்
இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Mecharonics Engineering Mechanical,
Electrical and Computer Technology கலவைதான் இந்த Mechatronics Engineering , தானியங்கி ரோபோக்கள் போன்ற அதியற்புத தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடங்கிய இந்த பாட பிரிவுகு இப்பொழுதும், இனி வரும் காலங்களில் பெருமளவில் தேவை உள்ளது
என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Naval Architecture
கடல் வாகனகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை பற்றிய படிப்பு இது, இப்பொழுது வான்வழி போக்குவரத்தும் வளர்ச்சி அடைத்து வருவதால் , இந்த துறை இன்றும் பெரிதும் நாடப்படும் துறையாக உள்ளது. இந்திய கப்பல் படைலும் இந்த படிப்புக்கான தேவை அதிக அளவிலேய உள்ளது
ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன
Agriculture Information Technology
தகவல் தொழில் நுட்பவியல் சில ஆண்டுகளாக பரவலான முக்கியத்துவத்தை பெற்று வருவதை நாம் அறிவோம். இதை விவசாய உற்பதிலும் பயன்படுத்தும் அறிவியல் தான் Agriculture Information Technology
இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் 'பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி'. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
church of the Holy Sepulchre
ஜெருசலம்:இயேசு பிறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த புண்ணியஸ்தலம் என்று அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் நம்பும் ஜெருசலத்தில் உள்ள புனித கல்லறை ஆலயத்தை( church of the Holy Sepulchre) பன்னெடுங்காலமாக முஸ்லிம்களை திறந்து கொடுக்கின்றார்கள்.
ஜுதே,நுஸைபா ஆகிய முஸ்லிம் குடும்பங்களைச் சார்ந்த இருவர் தினமும் ஆலயத்தை திறந்து இரவில் பூட்டுகின்றார்கள்.12-ஆம் நூற்றாண்டில் இருந்தே இப்பொறுப்பை இந்தஇரண்டும் முஸ்லிம் குடும்பத்தினர்தாம் நிர்வகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 செ.மீ நீளம் கொண்ட சாவியுடன் அதீப் ஜூதே காலையில் ஆலயத்திற்கு வருவார். சாவியை அவர் வஜீஹ் நுஸைபாவிடம் ஒப்படைப்பார். ஏணி மூலம் வஜீஹ் ஆலயத்தின் வாசல் கதவின் பூட்டை திறப்பார்.இம்முறை இரவில் ஆலயத்தை பூட்டும் போதும் தொடருகிறது.
கி.பி 325-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் சாவியை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம்கள் பெற்ற வரலாறு: கி.பி 637-ஆம் ஆண்டு இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் ஜெருசலத்தை கைப்பற்றியபொழுது முதலில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை ஜெருசலத்தில் உள்ள ஆலயங்களை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியாகும். அன்று ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆர்ச் பிஷப் ஸெஃப்ராணியஸிற்கு உமர் அவர்கள் கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மதீனாவில் இருந்துஜெருசலத்திற்கு வந்த நுஸைபா குடும்பத்தினரிடம் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை கலீஃபா உமர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.1187-ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை சிலுவைப் போர் வீரர்களிடமிருந்து கைப்பற்றியபோது ஆர்த்தோடக்ஸ், கத்தோலிக்க சபையினர் இந்த ஆலயம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டபோது இவ்விரு பிரிவினரும் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை நுஸைபா குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சம்மதித்தனர்.
புனித கல்லறை ஆலயத்தில் திருப்பலி(கிறிஸ்தவ சடங்கு)நடத்துவது அவ்வளவுஎளிதானதல்ல. கத்தோலிக்க, க்ரீக், ஆர்த்தோடக்ஸ், ஆர்மீனியன், காப்டிக் என பல கிறிஸ்தவ பிரிவினரும் இந்த ஆலயத்தின் சிறப்பு உரிமைகளை கை பலத்தின் மூலமே கையகப்படுத்தியுள்ளனர். இவர்களிடையேயான சச்சரவுக்கு தீர்வு கண்டவர்
1853-ஆம் ஆண்டு உஸ்மானிய சுல்தான் ஆவார்.உஸ்மானியர்கள் நுஸைபா குடும்பத்தினருடன் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஜூதே குடும்பத்தினரிடம்சேர்த்து ஒப்படைத்தனர். ஆலயத்தை திறப்பதற்காக 2 சாவிகள் இருந்தன. ஒன்று உடைந்து விட்டதால் தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. இந்த சாவி 1187-ஆம் ஆண்டு தொட்டே உபயோகிக்கப்பட்டு வருகிறது. கல்லறை ஆலயத்தின் ஒரு சிறிய அறையில் இந்த சாவி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ சபையினரிடையே நிறுவப்பட்ட சமாதானத்தின் காவலர்களாக இன்று முஸ்லிம்களான நுஸைபா மற்றும் ஜூதே குடும்பத்தினரே திகழ்கின்றனர்.
Monday, 8 April 2013
முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன?
“அரோகரா” என்பதைப் பிரித்தால், அர+ஓ+ஹர எனப் பொருள்படும். அரன், கரன் (ஹரன்) இரண்டுமே, சிவனாரின் திருப்பெயர்கள். ஓங்கார ஒலியுடன் சிவநாமத்தை உச்சரிப்பதே “அர ஓ ஹர” என்பதன் பொருள். இந்த “அர ஓ ஹர” என்பதே , ரகர விகுதி, ஓகார நெடிலுடன் சேர்ந்து “அரோஹரா” ஆனது!
இதற்கு இப்படியும் பொருள்கொள்வர். “அர ஹரோ ஹரா” (அரனே எங்கள் துன்பங்களை அழிப்பாயாக!) என்பதே “அரோஹரா” எனச் சுருங்கியது என்பர். ஞானசம்பந்தப்பெருமானாலேயே இவ்வழக்கம் உருவானதாகவும், ஒரு செவிவழிக்கதை வழங்குகிறது.
திருவைந்தெழுத்து, எத்துணை சக்தி வாய்ந்ததோ, எம்பெருமானின் அத்தனை திருநாமங்களும் அதேயளவு சக்திவாய்ந்தவை என்பது மெய்ஞ்ஞானிகள் கூறும் உண்மை. அவ்வகையில், “அரன்” எனும் நாமமும் மிகுந்த சக்தி படைத்ததே! திருமுறை ஓதியபின், நாம் “அரகர மாதேவா” என்பதும், வடநாட்டார், “ஹர் ஹர் மஹாதேவா” என்பதும் இதனாற்றான்!
எனினும், இறைவனை “அர ஓ ஹர” எனப்போற்றும் வழக்கம், தமிழ்மண்ணிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனாற்றான் போலும், விசேடமாக தமிழரின் தெய்வமாம், முருகனின் தலங்களிலெல்லாம், இன்று “அர ஓ ஹர” முழக்கம் கேட்கிறது.
ஈழத்தைப் பொறுத்தவரை, முருகன் ஆலயங்களில் மட்டுமன்றி, சிவன் – பிள்ளையார் – அம்மன், ஏன் திருமால் ஆலயங்களிலும் “”அரோகரா” முழக்கம் கேட்கக் காணலாம். இது, சைவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்களில், தம் முழுமுதலாம், அரனையே காண்கின்றனர் என்ற தத்துவத்தையும் உணர்த்தி நிற்கின்றதல்லவா?
“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே வையகம் சூழ்கவே!”
“அரோகரா” என்பதைப் பிரித்தால், அர+ஓ+ஹர எனப் பொருள்படும். அரன், கரன் (ஹரன்) இரண்டுமே, சிவனாரின் திருப்பெயர்கள். ஓங்கார ஒலியுடன் சிவநாமத்தை உச்சரிப்பதே “அர ஓ ஹர” என்பதன் பொருள். இந்த “அர ஓ ஹர” என்பதே , ரகர விகுதி, ஓகார நெடிலுடன் சேர்ந்து “அரோஹரா” ஆனது!
இதற்கு இப்படியும் பொருள்கொள்வர். “அர ஹரோ ஹரா” (அரனே எங்கள் துன்பங்களை அழிப்பாயாக!) என்பதே “அரோஹரா” எனச் சுருங்கியது என்பர். ஞானசம்பந்தப்பெருமானாலேயே இவ்வழக்கம் உருவானதாகவும், ஒரு செவிவழிக்கதை வழங்குகிறது.
திருவைந்தெழுத்து, எத்துணை சக்தி வாய்ந்ததோ, எம்பெருமானின் அத்தனை திருநாமங்களும் அதேயளவு சக்திவாய்ந்தவை என்பது மெய்ஞ்ஞானிகள் கூறும் உண்மை. அவ்வகையில், “அரன்” எனும் நாமமும் மிகுந்த சக்தி படைத்ததே! திருமுறை ஓதியபின், நாம் “அரகர மாதேவா” என்பதும், வடநாட்டார், “ஹர் ஹர் மஹாதேவா” என்பதும் இதனாற்றான்!
எனினும், இறைவனை “அர ஓ ஹர” எனப்போற்றும் வழக்கம், தமிழ்மண்ணிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனாற்றான் போலும், விசேடமாக தமிழரின் தெய்வமாம், முருகனின் தலங்களிலெல்லாம், இன்று “அர ஓ ஹர” முழக்கம் கேட்கிறது.
ஈழத்தைப் பொறுத்தவரை, முருகன் ஆலயங்களில் மட்டுமன்றி, சிவன் – பிள்ளையார் – அம்மன், ஏன் திருமால் ஆலயங்களிலும் “”அரோகரா” முழக்கம் கேட்கக் காணலாம். இது, சைவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்களில், தம் முழுமுதலாம், அரனையே காண்கின்றனர் என்ற தத்துவத்தையும் உணர்த்தி நிற்கின்றதல்லவா?
“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே வையகம் சூழ்கவே!”
Friday, 5 April 2013
அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
யார் யாருக்கெல்லாம் , ஜாதக ரீதியாக ராகு தசை, அல்லது ராகு புத்தி நடக்கிறதோ, எவர் ஒருவருக்கு ஜென்ம ராகு இருக்கிறதோ ( தற்போது தனுசு ராசியில் ) அவர்கள், அருகில் இருக்கும் இந்த அம்மனின் சக்தி பீடங்களில் ராகு கால நேரத்தில் , மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டால் , அவர்களுக்கு அம்மன் கடாட்சம் கண்டிப்பாக கிட்டும். அவர்களுக்கு ராகுவினால் ஏற்படும் தொல்லைகள் நிச்சயமாக குறையும்.
இந்த ஸ்தலங்கள் அனைத்தும் அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள் .
1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம்
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உத்திர பிரதேசம்
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்
Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_18.html#ixzz2PckkDQwG
Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_18.html#ixzz2PckJKzzZ
Thursday, 4 April 2013
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும்-
இகோ கார்':
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும்-
துபாய் மாணவர்கள் கண்டுபிடிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்
ஒன்றை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள
உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்
இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள
இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம்
செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள்
உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.
Monday, 1 April 2013
குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்
குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்.........
ஓம் கணபதி வருக,
ஓங்கார கணபதி வருக
ரீங் கணபதி வருக,
ரீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக,
ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக,
எங்கள் குடும்பம் மேன்மையுற
வசி வசி வய நம சிவாய நம
1. சிவஞான போதம்
2. சிவஞான சித்தியார்
3. இருபா இருப·து
4. திருவுந்தியார்
5. திருக்களிற்றுப்படியார்
6. உண்மை விளக்கம்
7. சிவப்பிரகாசம்
8. திருவருட்பயன்
9. வினா வெண்பா
10. போற்றிப்ப·றொடை
11. கொடிக்கவி
12. நெஞ்சுவிடுதூது
13. உண்மை நெறி விளக்கம்
14. சங்கற்ப நிராகரணம்
ஓம் கணபதி வருக,
ஓங்கார கணபதி வருக
ரீங் கணபதி வருக,
ரீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக,
ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக,
எங்கள் குடும்பம் மேன்மையுற
வசி வசி வய நம சிவாய நம
1. சிவஞான போதம்
2. சிவஞான சித்தியார்
3. இருபா இருப·து
4. திருவுந்தியார்
5. திருக்களிற்றுப்படியார்
6. உண்மை விளக்கம்
7. சிவப்பிரகாசம்
8. திருவருட்பயன்
9. வினா வெண்பா
10. போற்றிப்ப·றொடை
11. கொடிக்கவி
12. நெஞ்சுவிடுதூது
13. உண்மை நெறி விளக்கம்
14. சங்கற்ப நிராகரணம்
Subscribe to:
Comments (Atom)
